கோவையில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 11
கோவையில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரினை மதியம் அவரது வீட்டுக்கு பள்ளி உதவியாளர் அழைத்து வந்து விட்டுள்ளார்.
விவரம் கேட்ட ஜாபரின் பெற்றோரிடம், பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது.
இதனிடையே, வீட்டிற்குள் புகுந்த ஜாபர் கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜாபரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, மாணவன் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரினை மதியம் அவரது வீட்டுக்கு பள்ளி உதவியாளர் அழைத்து வந்து விட்டுள்ளார்.
விவரம் கேட்ட ஜாபரின் பெற்றோரிடம், பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது.
இதனிடையே, வீட்டிற்குள் புகுந்த ஜாபர் கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜாபரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, மாணவன் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.