விசாரணை ஆணையம் முன்பு மீண்டும் ஆஜரானார் ஷீலா பாலகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார்.

ஜனவரி 11

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில், சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் தீபக், அரசு மருத்துவர்கள், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன், தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்பட பலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

முன்னாள் தலைமை செயலாளராகவும், அரசு ஆலோசகராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கனவே, கடந்த 20-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தார். இந்த நிலையில் ஷீலா பாலகிருஷ்ணனை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று காலை ஷீலா பாலகிருஷ்ணன் சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அப்போது, ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மேலும் சில தகவல்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டது. 

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த 4 பேரில் ஷீலா பாலகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...