விளம்பர சுவர்களாக மாறி வரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.


கோவை, ஜனவரி 11

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுப்புறத்தையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தும் மாவட்ட நிர்வாகம் தனக்கான கட்டிடத்தைத் தூய்மையாக வைக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.



இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "அரசு சுவர் மற்றும் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் தற்போது பெருகிவருகிறது. இதனைத் தடுக்க கோவை மாநகராட்சி சில வருடங்களுக்கு முன்பு அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்தை முதலில் சங்கங்கள் ஆரம்பித்தன. அதன் பின் தற்போது பல்வேறு தரப்பினரும் இதனைப் பின் தொடர்ந்து வருகின்றனர். இது போன்ற போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அவர்களை ஈர்க்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுக்கின்றன. இதனால் கட்டிடத்தின் அழகு சீர்குலைந்து முகம் சுலிக்க வைக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...