சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு : தினகரனும் அவை புறக்கணிப்பு

சபாநாயகர் போக்கு சர்வாதிகார போக்காக இருப்பதாகக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல, அமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டிடிவி தினகரன் சட்டப்பேரவையை புறக்கணித்தார்.

ஜனவரி 09

சபாநாயகர் போக்கு சர்வாதிகார போக்காக இருப்பதாகக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல, அமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டிடிவி தினகரன் சட்டப்பேரவையை புறக்கணித்தார். 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரத்தின்போது ஒக்கி புயல் பாதிப்பு, அரசின் செயல்பாடு, பஸ் தொழிலாளர் போராட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

அப்போது, அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தொழிற்சங்கங்கள் தவறான தகவலைப் பரப்பி பேருந்து ஊழியர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளன. பேச்சுவார்த்தையின்போது, வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டது. இதனை திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் செய்தன. இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பன்னீர்செல்வம் பேச்சு தொழிலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. இதனை சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரையை விமர்சனம் செய்து திமுக எம்எல்ஏ அன்பழகன் உரைநிகழ்த்தத் தொடங்கினார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, சட்டசபையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

இது தொடர்பாக பேரவைக்கு வெளியே ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் பேசும்போது பல நிலைகளில் குறுக்கீடு இருந்தது. ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும் நிலையில், ஆளுநர் பற்றியே பேசக்கூடாது என சபாநாயகர் கூறுகிறார். சட்டப்பேரவையில் ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்று தான் விதி உள்ளது. ஆளுநரை பற்றியே பேசக்கூடாது எனக்கூறி அன்பழகன் பேச்சை சபாநாயகர் நீக்கிவிட்டார். சட்டப்பேரவையில், ஆளுநர் சென்னாரெட்டியை ஜெயலலிதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சபாநாயகர் போக்கு சர்வாதிகார போக்காக உள்ளது. போராட்டத்தை திமுக தூண்டுவதாக ஓபிஎஸ் அபாண்டமாகப் பேசியுள்ளார். இதனை எதிர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் வெளிநடப்பு :-

இதேபோல, கேள்வி நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அமைச்சர் தங்கமணி பேசும்போது, டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டுகளை கூறினார். தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்க வாய்ப்பு அளிக்கும்படி டிடிவி தினகரன் கேட்டார். ஆனால், பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “அமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு கேட்டதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதேபோல, மெஜாரிட்டி அரசு என்று அமைச்சர் கூறியதற்கு பதில் அளிக்க முயன்றபோதும் வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து பேச முயன்றபோதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே வெளிநடப்பு செய்தேன்” என்றார்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...