பாசனதிட்டப்பணிகளை இணையதளத்தில் பதிவு செய்யத் தற்காலிக பதிவாளர்களுக்கான பணிநியமன முகமை

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 9

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய உள்ள பணியாளர்கள், இளங்கலைபட்டப்படிப்பு, கணினி இயக்குத்திறன், தட்டச்சுதிறனில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.

இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது பணி நியமன முகமையின் விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்கச் சேவைக்கட்டணம் ஆகியவற்றைத் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வரும்படி, ஜனவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை உடனடியாக ஒப்பந்தப் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...