”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்”

கோவை, ஜனவரி 05

கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும் என உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கூறினார். 

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ”கெட் இன்பயர்ட் பை டன்மை பக்ஷி” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதி ரோஹித் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் டன்மை பக்ஷி பேசுகையில், ”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்.  நாம் எதில் பேரார்வம் கொண்டுள்ளோம் என்பதை தெரிந்து பின்தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.” என்றார். மேலும், புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு பற்றியும், நரம்பியல் உலைஅமைப்புகள் பற்றியும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் கல்வி இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் பாராட்டுரையும், நன்றியுரையும் வழங்கினார். இவர்  டன்மைபக்ஷியின் இளம் வயது சாதனைகளுக்காக அவரைப் பெரிதும் பாராட்டினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...