திருப்பூர் ஜனவரி 5
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தோட்டத்தில் தனியாக இருந்த கணவன் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்- சொத்துக்காக மகனே தாய் தந்தையரை கொடூரமாக கொலை செய்து நாடகமாடியது அம்பலம்.கொலை வழக்கில் மகன் உட்பட 3 பேர் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் மாவட்டம் காங்க்யத்தை அடுத்த மிதிப்பாறையை அடுத்துள்ளது சூலக்கல் புதூர். இப்பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்துவருபவர் பழனிச்சாமி, 60 வயதான பழனிச்சாமி தனது மனைவி கண்ணம்மாளுடன் வசித்துவந்துள்ளார்.
மேலும் விவசாயியான பழனிச்சாமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் தோட்டத்தில் மாந்தோப்பை பராமரித்து வந்துளளார். மேலும் தம்பதியருக்கு பெரியசாமி என்கிற மகனும், கண்ணம்மாள் எப்கிற மகளும் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி திருப்பூர் வாய்க்கால் மேட்டில் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியாக வசித்து வந்த தம்பதியரின் வீட்டிற்கு இன்று காலை சென்ற பால்காரர் வீட்டின் முன்புறமாக கண்ணம்மாள் மற்றும் கணவர் பழனிச்சாமி ரத்தவெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார்.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதல்கட்ட விசாரணையில் தனியாக தோட்டத்து சாலையில் இருந்த தம்பதியரை நோட்டமிட்டு பின்னர் இரவு சுமார் 11 மணி அளவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் வெளியில் கயிற்று கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பழனிச்சானியை கொடூரமாக அரிவாளால் தலையில் இரண்டு இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளனர். மேலும் இவரது மனைவி கண்ணம்மாளையும் வெட்டி கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையில் சொத்து சம்பந்தமாக பழனிச்சானிக்கும் அவரது மகனுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிய வந்தது.மேலும் தோட்டத்தில் வேலைபார்ர்து வந்த யுவராஜ் மற்றும் கார் டிரைவர் நாகராஜ் ஆகிய இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பெற்ற மகனே தாய் தந்தையரை கொன்று நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
தந்தைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்த்திற்கு ஆசைபட்டு இது குறித்து பழனிச்சாமியிடம் பெரியசாமி கேட்டதற்கு மறுத்துவிடவே, இதனால் ஆத்திர்மடைந்து தோட்டத்த்தில் வேலை செய்யும் யுவராஜ் மற்றும் கார் ஓட்டுனர் நாகராஜ் ஆகிய இருவரையும் வைத்து தந்தையை கொலைசெய்ய திட்டமிட்டுந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதனை மறைக்க திருச்செந்தூருக்கு செல்வதாக கூறி இரவே பெரியசாமி சென்ற நிலையில் காலை ஒன்றுமே நடக்காதது போல் பெற்றோர் இருவரும் கொலையான இடத்தில் அழுதுகொண்டே நாடகமாடியுள்ளார். இருவரின் வாக்குமூலத்தின் முலம் முருகேசை கைது செய்த போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகனே சொத்துக்காக தாய் தந்தையரை கொடூரமாக ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையெந் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தோட்டத்தில் தனியாக இருந்த கணவன் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்- சொத்துக்காக மகனே தாய் தந்தையரை கொடூரமாக கொலை செய்து நாடகமாடியது அம்பலம்.கொலை வழக்கில் மகன் உட்பட 3 பேர் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் மாவட்டம் காங்க்யத்தை அடுத்த மிதிப்பாறையை அடுத்துள்ளது சூலக்கல் புதூர். இப்பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்துவருபவர் பழனிச்சாமி, 60 வயதான பழனிச்சாமி தனது மனைவி கண்ணம்மாளுடன் வசித்துவந்துள்ளார்.
மேலும் விவசாயியான பழனிச்சாமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் தோட்டத்தில் மாந்தோப்பை பராமரித்து வந்துளளார். மேலும் தம்பதியருக்கு பெரியசாமி என்கிற மகனும், கண்ணம்மாள் எப்கிற மகளும் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி திருப்பூர் வாய்க்கால் மேட்டில் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியாக வசித்து வந்த தம்பதியரின் வீட்டிற்கு இன்று காலை சென்ற பால்காரர் வீட்டின் முன்புறமாக கண்ணம்மாள் மற்றும் கணவர் பழனிச்சாமி ரத்தவெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார்.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதல்கட்ட விசாரணையில் தனியாக தோட்டத்து சாலையில் இருந்த தம்பதியரை நோட்டமிட்டு பின்னர் இரவு சுமார் 11 மணி அளவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் வெளியில் கயிற்று கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பழனிச்சானியை கொடூரமாக அரிவாளால் தலையில் இரண்டு இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளனர். மேலும் இவரது மனைவி கண்ணம்மாளையும் வெட்டி கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையில் சொத்து சம்பந்தமாக பழனிச்சானிக்கும் அவரது மகனுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிய வந்தது.மேலும் தோட்டத்தில் வேலைபார்ர்து வந்த யுவராஜ் மற்றும் கார் டிரைவர் நாகராஜ் ஆகிய இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பெற்ற மகனே தாய் தந்தையரை கொன்று நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
தந்தைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்த்திற்கு ஆசைபட்டு இது குறித்து பழனிச்சாமியிடம் பெரியசாமி கேட்டதற்கு மறுத்துவிடவே, இதனால் ஆத்திர்மடைந்து தோட்டத்த்தில் வேலை செய்யும் யுவராஜ் மற்றும் கார் ஓட்டுனர் நாகராஜ் ஆகிய இருவரையும் வைத்து தந்தையை கொலைசெய்ய திட்டமிட்டுந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதனை மறைக்க திருச்செந்தூருக்கு செல்வதாக கூறி இரவே பெரியசாமி சென்ற நிலையில் காலை ஒன்றுமே நடக்காதது போல் பெற்றோர் இருவரும் கொலையான இடத்தில் அழுதுகொண்டே நாடகமாடியுள்ளார். இருவரின் வாக்குமூலத்தின் முலம் முருகேசை கைது செய்த போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகனே சொத்துக்காக தாய் தந்தையரை கொடூரமாக ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையெந் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.