போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோவை, ஜனவரி 5
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசியவர் கோவை மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், குப்பை வரி, குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்ட வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கோவையில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகம் இடமாற்றம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் இம்முயற்சியை கைவிட வேண்டுமெனவும் தெரிவித்தார். மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக வாழ்வாதராம் ஒவ்வொன்றாக பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பேருந்து தொழிலாளர் வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசியவர் கோவை மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், குப்பை வரி, குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்ட வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கோவையில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகம் இடமாற்றம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் இம்முயற்சியை கைவிட வேண்டுமெனவும் தெரிவித்தார். மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக வாழ்வாதராம் ஒவ்வொன்றாக பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பேருந்து தொழிலாளர் வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.