போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - வைகோ

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 5

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசியவர் கோவை மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், குப்பை வரி, குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்ட வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் கோவையில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகம் இடமாற்றம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் இம்முயற்சியை கைவிட வேண்டுமெனவும் தெரிவித்தார். மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக வாழ்வாதராம் ஒவ்வொன்றாக பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பேருந்து தொழிலாளர் வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...