போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ மனு

கோவையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை, ஜனவரி 04

கோவையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார். 

கோவை மாநகர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பெரியய்யாவை சந்தித்து மனு அளித்தார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-  கோவை மாநகரத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகிலும், காமராஜர் சாலை, திருச்சி சாலை சந்திப்பு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி எந்த நேரமும் நிலவி வருகின்றது. இதற்கிடையே, சிங்காநல்லூர் பேருந்துநிலையம் முன்பு அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி வருகின்றது. இங்கு வரும் வாகனங்கள் சாலையில் ஒழுங்குபடுத்தப்படாததால், அதிக நெருக்கடி நிலைக்கு பொதுமக்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுதவிர, எஸ்என்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடுமையான போக்குவரத்து நெருக்கடிகளை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ நா.கார்த்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்;- போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளை, சீர் செய்ய வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். நெருக்கடி உள்ள பகுதிகளில் கூடுதலான போக்குவரத்து காவலர்களை நியமிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகே அதிக போக்குவரத்து நெருக்கடி இருப்பதால், இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தப் போக்குவரத்து பிரச்சினையை உடனடியாக சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார். 

  

இந்த நிகழ்வின்போது,பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, நிர்வாகிகள் கோவிந்தராஜ், சசிகுமார், சேரலாதன், பாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...