போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ மனு

கோவையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை, ஜனவரி 04

கோவையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார். 

கோவை மாநகர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பெரியய்யாவை சந்தித்து மனு அளித்தார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-  கோவை மாநகரத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகிலும், காமராஜர் சாலை, திருச்சி சாலை சந்திப்பு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி எந்த நேரமும் நிலவி வருகின்றது. இதற்கிடையே, சிங்காநல்லூர் பேருந்துநிலையம் முன்பு அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி வருகின்றது. இங்கு வரும் வாகனங்கள் சாலையில் ஒழுங்குபடுத்தப்படாததால், அதிக நெருக்கடி நிலைக்கு பொதுமக்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுதவிர, எஸ்என்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடுமையான போக்குவரத்து நெருக்கடிகளை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ நா.கார்த்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்;- போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளை, சீர் செய்ய வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். நெருக்கடி உள்ள பகுதிகளில் கூடுதலான போக்குவரத்து காவலர்களை நியமிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகே அதிக போக்குவரத்து நெருக்கடி இருப்பதால், இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தப் போக்குவரத்து பிரச்சினையை உடனடியாக சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார். 

  

இந்த நிகழ்வின்போது,பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, நிர்வாகிகள் கோவிந்தராஜ், சசிகுமார், சேரலாதன், பாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...