‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு தொடரும் ஆதரவு - மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரை இளைஞர்கள் சைக்கிள் பயணம்

கோவை, ஜனவரி 04

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 20 வாலிபர்கள் தமிழகம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.  



யூடிஆர் (UTR) சைக்ளிங் என்று அழைக்கப்படும் இந்தக் குழு மகாராஷ்டிரா மாநிலம் உட்கிர் நகரிலிருந்து இந்த சைக்கிள் பயணத்தை டிசம்பர் 16-ம் தேதி துவங்கினர். சுமார் 1,600 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஜனவரி 1-ம் தேதி ராமேஸ்வரத்தை அடைந்த இக்குழுவினர் இன்று (ஜன.,04) கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை புரிந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் உட்கிர் நகரிலிருந்து திருப்பதி வரை சுமார் 800 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்வது இக்குழுவின் வழக்கம். ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருப்பதியை அடையும் இவர்களது வழக்கமான பயணம் இவ்வாண்டு சற்று வித்தியாசமாக அமைத்தது. நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்ட இக்குழு இந்த உன்னத நோக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இவ்வருடம் தங்களது சைக்கிள் பயணத்தை உட்கிர் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை நிகழ்த்தினர். 

தங்களது வழக்கமான பயணதூரத்தை விட இருமடங்கு அதிகதூரமாக சுமார் 1,600 கி.மீ. தூரத்தை 16 நாட்களில் கடந்து ராமேஸ்வரத்தை அடைந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்த இவர்கள், புதுச்சேரியை அடைந்த போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை இக்குழுவை சந்தித்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவை நதிகளை மீட்போம் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறப்பாக வரவேற்றனர் என்றும், தமிழகம் மற்றும் புதுவை தன்னார்வலர்கள் தங்கள் வருகையைச் சிறப்பாக விழாக்கோலத்துடன் கொண்டாடினர் என்று குழுவினர் குறிப்பிட்டனர். மேலும், தமிழகத்தின் சிறுஊர்கள் மற்றும் கிராமங்களில் இருந்தும் மக்கள் தங்களை உற்சாகமாக வரவேற்றது நெகிழ்வாக உள்ளதாகக் கூறிய குழுவினர், நதிகளை மீட்போம் இயக்கத்தின் ஒருபகுதியாக தங்கள் ஊரில் தற்போது 300 மரக்கன்றுகள் நட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...