‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு தொடரும் ஆதரவு - மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரை இளைஞர்கள் சைக்கிள் பயணம்

கோவை, ஜனவரி 04

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 20 வாலிபர்கள் தமிழகம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.  



யூடிஆர் (UTR) சைக்ளிங் என்று அழைக்கப்படும் இந்தக் குழு மகாராஷ்டிரா மாநிலம் உட்கிர் நகரிலிருந்து இந்த சைக்கிள் பயணத்தை டிசம்பர் 16-ம் தேதி துவங்கினர். சுமார் 1,600 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஜனவரி 1-ம் தேதி ராமேஸ்வரத்தை அடைந்த இக்குழுவினர் இன்று (ஜன.,04) கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை புரிந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் உட்கிர் நகரிலிருந்து திருப்பதி வரை சுமார் 800 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்வது இக்குழுவின் வழக்கம். ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருப்பதியை அடையும் இவர்களது வழக்கமான பயணம் இவ்வாண்டு சற்று வித்தியாசமாக அமைத்தது. நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்ட இக்குழு இந்த உன்னத நோக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இவ்வருடம் தங்களது சைக்கிள் பயணத்தை உட்கிர் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை நிகழ்த்தினர். 

தங்களது வழக்கமான பயணதூரத்தை விட இருமடங்கு அதிகதூரமாக சுமார் 1,600 கி.மீ. தூரத்தை 16 நாட்களில் கடந்து ராமேஸ்வரத்தை அடைந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்த இவர்கள், புதுச்சேரியை அடைந்த போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை இக்குழுவை சந்தித்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவை நதிகளை மீட்போம் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறப்பாக வரவேற்றனர் என்றும், தமிழகம் மற்றும் புதுவை தன்னார்வலர்கள் தங்கள் வருகையைச் சிறப்பாக விழாக்கோலத்துடன் கொண்டாடினர் என்று குழுவினர் குறிப்பிட்டனர். மேலும், தமிழகத்தின் சிறுஊர்கள் மற்றும் கிராமங்களில் இருந்தும் மக்கள் தங்களை உற்சாகமாக வரவேற்றது நெகிழ்வாக உள்ளதாகக் கூறிய குழுவினர், நதிகளை மீட்போம் இயக்கத்தின் ஒருபகுதியாக தங்கள் ஊரில் தற்போது 300 மரக்கன்றுகள் நட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...