அரசியலில் களம்புகும் ரஜினியை யாரும் இயக்கவில்லை' - ஜி.கே. வாசன்

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர், ஜனவரி 03:

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகரில் த.மா.க.,வின் மாணவரணி செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 2017 டிசம்பர் 31-ஆம் தேதியன்று கோவை மாவட்டம் சூலூர் காவல் சரகத்திற்குட்பட்ட தெண்ணம்பாளையம் அருகே சாலை விபத்தில் பலியாயினர். அவர்களது இல்லத்திற்கு இன்று சென்ற ஜி.கே.வாசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேட்டியளிக்கையில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு புதியவர் அல்ல. 30 வருடங்களாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் அரசியலை கவனித்து வருகிறார். அரசியல் ஆழம் தெரிந்தவர். பல தலைவர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரைச் சந்தித்து ஆலோசனை செய்ததுண்டு.

ரஜினியின் முழுநேர அரசியலுக்காக பொறுத்திருக்கிறோம். அவரின் கொள்கை, கோட்பாடுகளை பொறுத்து த.மா.க கூட்டணி முடிவு செய்யும்" என்றார்.

மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதனை முறைப்படுத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிக்கப்படும் போது ஆய்வு, ஆலோசனை, மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...