யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்- உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்ற கல்யாணி

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 3

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நாளை யானைகள் நலவாழ்வு முகாம் துவங்க உள்ளது. யானைகளுக்கு புத்துணர்வை அளிக்கும் வகையில் இந்த முகாம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் யானையான கல்யாணி இன்று புறப்பட்டுச் சென்றது. 26 வயதாகும் கல்யாணி காலை குளிக்க வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.

கோவிலின் உள்ளே யானைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் லாரியில் பாதுகாப்பாக தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேப்போன்று, தமிழகம் முழுவதுமுள்ள கோவில் திருப்பணிகளில் ஈடுபடும் யானைகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...