12 அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் செய்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஜனவரி 3

அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தெடார்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சசிகலா அணியில் இருந்து வந்த மருது அழகுராஜுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுகவின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

1.சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்)

2. பா.வளர்மதி ( கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்)

3. எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்)

4. வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்)

5. ஜே.சி.டி.பிரபாகர், (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்)

6. கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டம்)

7. ம.அழகுராஜ் (எ) மருது அழகுராஜ்

8. கோவை செல்வராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)

9. பேராசிரியர் தீரன் (எ) ஏ.ராஜேந்திரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம் வடக்கு மாவட்டம்)

10. கே.சி.பழனிச்சாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாவட்டம்)

11. ஏ.எஸ்.மகேஸ்வரி (கோவை மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)

12. ஆர்.எம்.பாபு முருகவேல் (ஆரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்)

மேற்கண்ட செய்தித் தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களில் கலந்துகொண்டு பேசுவதற்கு தலைமைக் கழகத்தின் அனுமதி இல்லை என்பதையும், தோழமைக் கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஒய்.ஜவகர் அலி மட்டுமே ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்வர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...