ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமை) மனு அளித்தவருக்கு 13,6௦௦ ரூபாய் கட்டணம் செலுத்த உத்தரவிட்ட கோவை மாநகராட்சி

கோவை, டிசம்பர் 3

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை கூட்டப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் அதில் இயற்றப்படும். தற்போது உள்ளாட்சி நிர்வாகிகள் இல்லாததால் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் மக்களின் பார்வைக்காக மாநகராட்சி இணையதளத்தில் வெளியடப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் தீர்மானங்கன்கள் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு சமூக ஆர்வலர் திரு. எஸ். பி. தியாகராஜன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தனி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான பொருள்களின் அட்டவணை நகல்களை, உரிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு வழங்குமாறு’ மாநகராட்சி மாமன்ற செயலாளர் பதவியில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் கேட்டுள்ளார்.



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, இதற்கு அதிகபட்சமாக ரூ.5௦௦/- மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தால் அனுப்பபட்ட பதில் கடித்ததில், 13 ஆயிரத்து 6௦௦ ரூபாய் செலுத்தி தகவலை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தியாகராஜன் கூறியதாவது, ‘மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்கள், இணையதளத்தில் வெளியிடப்படாதது, பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இதனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அவற்றை பெற மனு அளித்ததற்கு, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இயற்றப்பட்ட மாமன்ற தீர்மானங்களின் பொருள் மொத்தம் 129 எனவும், அவற்றுக்கு, 13 ஆயிரத்து 6௦௦ ரூபாய் கட்டணம் செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் கடிதம் அனுப்பியுள்ளனர். தீர்மான பொருள்களின் அட்டவணை, மொத்தம் ஐந்து பக்கங்கள் மட்டுமே வரும், அவற்றுக்கு அதிக பட்சம் ரூ.5௦௦/- கட்டணம் செலுத்தினால் போதும். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகள் தெரியவில்லையா? இல்லை தீர்மானங்களை மர்மாகவே வைத்திருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்களா, என்பது தெரியவில்லை’ என்றார்.

பொது தகவல் அலுவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘தீர்மான பொருள்களின் அட்டவணை என்ற ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளின் படி எதுவும் இல்லை. மனுதாரர் ‘நிகழ்ச்சி நிரல்’ என்று குறிப்பிட்டுருந்தால், அவற்றுக்கான கட்டணம் வலியுறுத்தப்பட்டிருக்கும்’ என்றார்.

மனுதாரரின் மனுவில் உரிய தகவல்கள் இல்லையென்றால், விளக்கம் கேட்டு தானே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும், என்ற சந்தேகத்திற்கும் மாமன்ற தீர்மானங்கள் இணையதளத்தில் வெளியிடப்பாடாதது ஏன் என்ற கேள்விக்கும், மாநகராட்சி அலுவலர்கள் முறையான பதில் கூற மறுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...