வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.


வால்பாறை, ஜனவரி 3

வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.

வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மண் கடத்தப்பட்டு அப்பகுதியில் கட்டிட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், முறைகேடாக விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் புகார் வந்ததையடுத்து வட்டாட்சியர் சு.குணசேகரன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, நல்லகாத்து சுங்கம் பகுதியில் வாகனத்தில் முறைகேடாக ஆற்று மணல் அள்ளப்படுவது கண்டறியப்பட்டது.



இதனிடையே, அதிகாரிகளைக் கண்ட மணல் கொள்ளையர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் மேற்படி மணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வால்பாறைக்கு உட்பட்ட சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "வால்பாறை நகராட்சி ஒப்பந்தப்படி கட்டுமாகப் பணிகளுக்கு கரூர் மணல் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆற்று மணலைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டிடம் உறுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு சில அரசியல் பிரமுகர்களும் உடந்தையாக உள்ளனர்.



தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...