கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசை வாகன பதிவு தொடக்கம்

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

கோவை, டிசம்பர் 29

கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழக வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும்.

கோவை மாவட்டத்தில், கோவை தெற்கு பகுதிக்கு TN-37, கோவை வடக்கு பகுதிக்கு TN-38, கோவை மேற்கு பகுதிக்கு TN-39, மேட்டுப்பாளையத்திற்கு TN-40, பொள்ளாச்சிக்கு TN-41 ஆகிய எண்களின் அடிப்படையில் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோவை தெற்கு ஆர்டிஓ-வில் ”D” வரிசையில் வாகனங்கள் பதிவு செய்வது தொடங்கியுள்ளது. தற்போது, பேன்ஸி எண்களைத் தவிர்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு பிராந்திய போக்குவரத்து அலுவலகம் முதன் முதலில் ”D” வாகனங்களைப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...