வரும் ஜன., 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

டிசம்பர் 28

தமிழக  சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக ஜூனில் துவங்கி ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை வரும் ஜனவரி, 8ல் துவங்க உள்ளது. இதனை சட்டப்பேரவை செயலர் பூபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். அதன்பின், ஆளுநர் உரை மீது, ஒரு வாரம் விவாதம் நடைபெறும். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்த பின், முதல்வர் பதில் அளிப்பார். அதன்பின், ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...