புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்றும் திருத்தேர் திருவிழா பக்தி மிகு சூழலில் சிறப்பாக நடைபெற்றது. கரகம் வீதியுலா, திருத்தேர் பவனி, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை : கோவை புதுசித்தாபுதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவமும் திருத்தேர் திருவிழாவும் பக்தி மிகு சூழலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா மே 5 முதல் மே 22, 2026 வரை நடைபெற்ற நிலையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அபிஷேகங்கள், தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவின் சிறப்பு அம்சங்களாக திருக்கல்யாணம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக மே 20ஆம் தேதி காலை கரகம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. தொடர்ந்து மதியம் மஹா ரதம் எனப்படும் திருத்தேர் சிறப்பாக புறப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருவருளைப் பெற்றனர்.



மேலும், விழா நாட்களில் பக்தர்களுக்காக அன்னதானம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குடும்பத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...