கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 93 நாடுகளுக்கு பயண அனுமதி பெற்ற பயணி இவர்.
Coimbatore: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை விரட்டியதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எடிஸ்லாவ் லியன் (38) என்பவர் நேற்று காலை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் மாங்கரை சலங்கை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை அங்கு வந்துள்ளது. யானையைப் பார்த்ததும் சுற்றுலா பயணி உயிர் பயத்தில் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார். சிறிது தூரம் அவரைத் துரத்திய யானை பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வேகமாக ஓடிய சுற்றுலா பயணி கால் தவறி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்ததில் சிறு காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த எடிஸ்லாவ் லியன், 93 நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதி பெற்ற பயணி எனவும், கேரளாவில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாடகை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி – மாங்கரை வழியாக ஊட்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் வெளியே வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோவை அங்கிருந்த சிலர் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கோவை வனத்துறை அதிகாரிகள், ஆனைகட்டி – மாங்கரை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளில் வெளியே வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். காட்டுப்பகுதிகளுக்குள் அனுமதியின்றி செல்வது ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எடிஸ்லாவ் லியன் (38) என்பவர் நேற்று காலை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் மாங்கரை சலங்கை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை அங்கு வந்துள்ளது. யானையைப் பார்த்ததும் சுற்றுலா பயணி உயிர் பயத்தில் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார். சிறிது தூரம் அவரைத் துரத்திய யானை பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வேகமாக ஓடிய சுற்றுலா பயணி கால் தவறி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்ததில் சிறு காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த எடிஸ்லாவ் லியன், 93 நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதி பெற்ற பயணி எனவும், கேரளாவில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாடகை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி – மாங்கரை வழியாக ஊட்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் வெளியே வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோவை அங்கிருந்த சிலர் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கோவை வனத்துறை அதிகாரிகள், ஆனைகட்டி – மாங்கரை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளில் வெளியே வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். காட்டுப்பகுதிகளுக்குள் அனுமதியின்றி செல்வது ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்.