கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போலீசார் கைது செய்து BNS சட்டப்பிரிவுகள் 78, 79 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். கோவில்மேடு சாந்தி வீதியை சேர்ந்த முருகன் (38) என்பவர் மீது பல பெண்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான காட்சியை கண்டுள்ளார். நடுத்தர வயது ஆண் ஒருவர் அரை நிர்வாணமாக நின்றுகொண்டு ஆபாச சைகைகள் செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதும், அவரது கணவர் ஓடி வந்ததை பார்த்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரித்தபோது, இதே நபர் பல இடங்களில் பெண்களை குறிவைத்து அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் இதே நபர் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

அப்போது விசாரணை நடத்திய போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்பட்டதால் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மீண்டும் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

நேற்று மீண்டும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து, கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில், அவர் கோவில்மேடு சாந்தி வீதியை சேர்ந்த முருகன் (38) என்பது தெரியவந்துள்ளது.

போலீசார் முருகனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர் மீது BNS சட்டப்பிரிவுகள் 78, 79 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பகுதி மக்கள் போலீசாரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...