முன்அனுமதி இல்லாமல் கண்காட்சிகளை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, டிசம்பர் 27

அனுமதி பெறாமல் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருட்காட்சி நடத்த இடம் வழங்கும் திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் தனியார் பொருட்காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டுமாயின், தனியார் நிறுவனத்தின் பொருட்காட்சிகள் நடத்தப்படும் இடத்திற்கான அனுமதி கடிதம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று, மூன்றாண்டுகளுக்கு வருமானவரி செலுத்தியற்கான வருமான வரிச்சான்று மற்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை பொருட்காட்சி நடத்தப்படும் நாட்களுக்குக் கணக்கிட்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலையாக செலுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் தனியார் நிறுவனம் வாயிலாக வழங்கப்படுதல் வேண்டும்.

ஆனால், ஒரு சில தனியார் நிறுவனங்கள் தடையின்மைச் சான்றிதழ்கள் பெறாமல், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் உதவியுடன் உரியத் தடையின்மை சான்றிதழ்கள் பெறப்படாமலும்,  முதலமைச்சர்; பொதுநிவாரண நிதியினை அரசுக்கு செலுத்தப்படாமலும் பொருட்காட்சிகள் நடத்தப்படுவதாக அறிய வருகின்றது. அவ்வாறு நடத்தப்படுவதாகக் கண்டறியப்படும் பட்சத்தில் அத்தனியார் நிறுவனத்தின் மீதும், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொருட்காட்சி நடத்திட இடம் வழங்கும் சம்மந்தப்பட்ட திருமண மண்டபங்களின் உரிமை ரத்து செய்யப்படும்.

இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்கள் வாயிலாக 7 நாட்களுக்கு குறைவாக நடத்தப்படும் பொருட்காட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக அனுமதி ஆணை வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம், அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், கோவை மாவட்டத்தில் தனியார் பொருட்காட்சி நடத்தவுள்ள தனியார் நிறுவனங்களது விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி அரசுக்கு அனுப்பிவைத்து, செய்தித்துறையின் இயக்குநரின் ஆணைவரப்பெற்ற பின்னர் பொருட்காட்சி நடத்திக்கொள்ள அவ்வரசாணையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சி நடத்திடும் தனியார் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பத்துடன் உரிய தடையின்மைச் சான்றிதழ்கள், மூன்றாண்டுகளுக்கு வருமானவரி செலுத்தியதற்கான வருமானவரி சான்றிதழ்கள் மற்றும் (சென்னையில் செலுத்தத்தக்க வகையில்) முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவரைவோலை ஆகியவற்றினை பொருட்காட்சி, கண்காட்சி நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பெயரில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். 

மேலும், பொருட்காட்சி, கண்காட்சி நடத்திட தடையின்மைச் சான்றிதழ்கள் வழங்கும் காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையின் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் காலம் தாழ்த்தாமல்; தடையின்மை சான்றிதழ்கள் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள். 15 நாட்களுக்கு குறைவாக சமர்ப்பிக்கப்படும் தனியார் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

அதேபோல, அனுமதி வழங்கப்படும் திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள், பொருட்காட்சி நடத்தவுள்ள தனியார் நிறுவனங்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறைகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ்கள் மற்றும் அரசிடமிருந்து அனுமதிக் கடிதம் பெறப்பட்டுள்ளதா என பரிசோதித்த பின்னரே பொருட்காட்சி நடத்திட அனுமதித்தல் வேண்டும்.

அரசிடமிருந்து அனுமதி பெறாமல் பொருட்காட்சி, கண்காட்சி நடத்தப்பட்டால் பொருட்காட்சி நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருட்காட்சி நடத்திட அனுமதி வழங்கும் திருமண மண்டபங்கள் மற்றும் திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...