கோவை, டிசம்பர் 27
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வை வரவேற்பதற்காக கோவை சாலைகளில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அவர் சில நாட்களுக்கு முன் தான் 2 G வழக்கில் விடுதலை பெற்றார்.

அவரை வரவேற்பதற்காக தி.மு.க. தொண்டர்கள் காளப்பட்டியில் இருந்து கோவையில்பாளையம் செல்லும் சாலையில் வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர்.
கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் உயிரிழந்த் சம்பவத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்ததோடு, சாலைகளில் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பேனர்களை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த ராசா-வை வரவேற்பதற்காக கோவையில் உள்ள சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, "ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வை வரவேற்பதற்காக கோவை சாலைகளில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அவர் சில நாட்களுக்கு முன் தான் 2 G வழக்கில் விடுதலை பெற்றார்.

அவரை வரவேற்பதற்காக தி.மு.க. தொண்டர்கள் காளப்பட்டியில் இருந்து கோவையில்பாளையம் செல்லும் சாலையில் வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர்.
கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் உயிரிழந்த் சம்பவத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்ததோடு, சாலைகளில் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பேனர்களை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த ராசா-வை வரவேற்பதற்காக கோவையில் உள்ள சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, "ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.