கோவை, டிசம்பர் 26
தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என்றும், அந்த மாற்றத்திற்காகத்தான் காத்திருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை, குனியமுத்தூரில் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் எந்த நேரமும் பெரிய மாறுதல் ஏற்படும். அந்த மாற்றத்திற்காகக் காத்திருக்கின்றோம். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்கின்றோம் என திருமாவளவன் சொல்லி இருக்கின்றார். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
போயஸ் கார்டன், கருணாநிதி இல்லம் என அனைவரின் வீட்டையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் யாரும் பார்த்திராத ஜெயக்குமாரின் வீடு மிகப்பெரிய மன்னர் மாளிகை போன்று இருக்கும். ஒரு தெருவில் ஆரம்பித்து மற்றொரு தெருவில் முடியும். இதை எப்படி அவர் சம்பாதித்தார்.
ஓரே ஒரு இடைத்தேர்தலில் ஜெயித்ததற்கு பைத்தியம் பிடித்தவர்களை போல அதிமுக அமைச்சர்கள் புலம்புகின்றனர். முதலமைச்சராக தினகரனை பார்க்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கீழ்த்தரமாகப் பேசுகின்றார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டது. அதில் இருந்து ஓ.எஸ். மணியன் வெளியே வர வேண்டும்.
அமைச்சர் ஜெயக்குமார் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மதுசூதனனை எங்களிடம் அனுப்பட்டும். அதே தொகுதியில் எங்களால் மதுசூதனனை ஜெயிக்க வைக்க முடியும். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரசியல் அனாதை.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என்றும், அந்த மாற்றத்திற்காகத்தான் காத்திருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை, குனியமுத்தூரில் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் எந்த நேரமும் பெரிய மாறுதல் ஏற்படும். அந்த மாற்றத்திற்காகக் காத்திருக்கின்றோம். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்கின்றோம் என திருமாவளவன் சொல்லி இருக்கின்றார். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
போயஸ் கார்டன், கருணாநிதி இல்லம் என அனைவரின் வீட்டையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் யாரும் பார்த்திராத ஜெயக்குமாரின் வீடு மிகப்பெரிய மன்னர் மாளிகை போன்று இருக்கும். ஒரு தெருவில் ஆரம்பித்து மற்றொரு தெருவில் முடியும். இதை எப்படி அவர் சம்பாதித்தார்.
ஓரே ஒரு இடைத்தேர்தலில் ஜெயித்ததற்கு பைத்தியம் பிடித்தவர்களை போல அதிமுக அமைச்சர்கள் புலம்புகின்றனர். முதலமைச்சராக தினகரனை பார்க்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கீழ்த்தரமாகப் பேசுகின்றார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டது. அதில் இருந்து ஓ.எஸ். மணியன் வெளியே வர வேண்டும்.
அமைச்சர் ஜெயக்குமார் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மதுசூதனனை எங்களிடம் அனுப்பட்டும். அதே தொகுதியில் எங்களால் மதுசூதனனை ஜெயிக்க வைக்க முடியும். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரசியல் அனாதை.
இவ்வாறு அவர் பேசினார்.