பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் பலி


திருப்பூர், டிசம்பர் 26

திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அருகே பழணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர்- 3 ஆண்  3 பெண் பரிதாபமாக  உயிரிழந்தனர்.

திருப்பூரில் இருந்து பழனிக்கு நேற்று பாதயாத்திரையாக பக்தர்கள் திருப்பூர் தாராபுரம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் தாராபுரத்திற்கு முன்பாக சூர்யநல்லூரை அடுத்த புதிவிநாயகர் கோயில் அருகே பக்தர்கள் நடந்துசென்றுகொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் நடராஜன்,பரமேஸ்வரி,விஜயா, காளிமுத்து,  ராஜாமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சாந்தி என்பரை சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்துபோனார். 

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி பலியான 5 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சாலைவிபத்தில் அரசு பேருந்து மோதி பக்தர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...