கோவை, டிசம்பர் 25
பஞ்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் கோவையில் நடைபெற்றது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான பஞ்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் செயல்படு வருகின்றன.
இங்கு பணி புரியும் பெண்கள் நாள் தோறும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
அவ்வாறு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
கோவை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமூக கல்வி மற்றும் வளர்ச்சி மையம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக கல்வி மற்றும் வளர்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் C. நம்பி, கோவை தொழிலாளர் நல நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் K. சுப்ரமணியன், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் R.தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு, தொழிற்சாலைகளில் பெண்களுக்கு உள்ள பிரச்சனைகள், உரிமைகள், ஊதிய முரண்பாடுகளின் போது பெண்கள் செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர்.

இந்த நிகழ்வில், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

பஞ்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் கோவையில் நடைபெற்றது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான பஞ்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் செயல்படு வருகின்றன.
இங்கு பணி புரியும் பெண்கள் நாள் தோறும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
அவ்வாறு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
கோவை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமூக கல்வி மற்றும் வளர்ச்சி மையம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக கல்வி மற்றும் வளர்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் C. நம்பி, கோவை தொழிலாளர் நல நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் K. சுப்ரமணியன், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் R.தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு, தொழிற்சாலைகளில் பெண்களுக்கு உள்ள பிரச்சனைகள், உரிமைகள், ஊதிய முரண்பாடுகளின் போது பெண்கள் செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர்.

இந்த நிகழ்வில், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
