தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம்: மனிதநேயமிக்க தொழிலதிபரின் ஏற்பாடு

டிசம்பர் 25

குஜராத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்குத் தொழிலதிபர் ஒருவர் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ஏழைப் பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்து வருகிறார். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும், தனது அந்த நற்செயலை அவர் தொடர்ந்துள்ளார். 6-வது ஆண்டான இந்த வருடத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார். திருமணம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தின் போது நடைபெற்று வருவதாகவும், திருமண ஜோடிகள் தங்கள் உடல் முழுவதும் வண்ணமயமான ஆபரணங்களை அணிந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தத் திருமணத்தை செய்து வைப்பதற்கு முக்கிய காரணம் கடந்த 2008-ஆம் ஆண்டு அவரது ஊழியர் ஒருவர், தனது மகள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், இதைக் கண்ட அவர் அதன்பின் இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தை நிறுவியதாகக் கூறப்படுகிறது.

இதில், இந்து மதத்தினர் மட்டுமின்றி கிறிஸ்தவர், இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த பெண்களும் அடங்குவார்கள். 251 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவில் சீர்வரிசைகளையும் தொழிலதிபர் மகேஷ் சவானி வழங்கியுள்ளார். தந்தை இழந்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பதன் மூலம் தனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் திருமணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண ஜோடிகளை வாழ்த்தினர்.

இது குறித்து மகேஷ் சவானி கூறுகையில், இதை நான் ஒரு தந்தை பொறுப்பில் இருந்து எடுத்துக் கொள்கிறேன். ஒரு தந்தை என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அதை தான் செய்ய முயற்சி செய்கிறேன், இந்தியாவில் ஒரு மகள் தனது தந்தையை இழந்துவிட்டால், அவளது திருமணம் என்பது கேள்வி குறியாகிறது. அதற்காக, குடும்பத்தினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இதை நான் தொடர்ந்து செய்வேன்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...