கோவை, டிசம்பர் 25
முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்கள், கள் இறக்கும் இயக்கத்துடன் வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
கோவையில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்து பெறும் வெற்றி, வெற்றியே அல்ல. கள் இயக்கத்துடன் வாதிட்டு பெறும் வெற்றியே வெற்றி. தினகரனின் வெற்றி, தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த தோல்வி. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதல் மூன்று இடங்களைக் பிடித்தவர்கள் ஒன்றிணைந்து, கள் இயக்கத்துடன் வாதிட்டு, கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என நிரூபிக்க வேண்டும். இது முடியாமல் போனால் இந்த மூன்று தரப்பும் அரசியலுக்கு முழுக்குப் போடுவதே நாட்டுக்கு நல்லது.
ஜனவரி 21-ஆம் தேதியன்று சொந்த தேவைக்காக கள் இறக்கிக் கொள்பவர்கள் இறக்கிக் கொள்ளலாம். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்விலும், இறப்பிலும் எழுந்திருக்கும் சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விசாரணை முடிக்கிவிடப்பட வேண்டும். 2ஜி வழக்கில் விடுதலையானவர்கள், சி.ஏ.ஜி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முதலமைச்சராகத் துடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள், கள் இயக்கத்தின் சவாலை ஏற்று வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்கள், கள் இறக்கும் இயக்கத்துடன் வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
கோவையில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்து பெறும் வெற்றி, வெற்றியே அல்ல. கள் இயக்கத்துடன் வாதிட்டு பெறும் வெற்றியே வெற்றி. தினகரனின் வெற்றி, தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த தோல்வி. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதல் மூன்று இடங்களைக் பிடித்தவர்கள் ஒன்றிணைந்து, கள் இயக்கத்துடன் வாதிட்டு, கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என நிரூபிக்க வேண்டும். இது முடியாமல் போனால் இந்த மூன்று தரப்பும் அரசியலுக்கு முழுக்குப் போடுவதே நாட்டுக்கு நல்லது.
ஜனவரி 21-ஆம் தேதியன்று சொந்த தேவைக்காக கள் இறக்கிக் கொள்பவர்கள் இறக்கிக் கொள்ளலாம். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்விலும், இறப்பிலும் எழுந்திருக்கும் சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விசாரணை முடிக்கிவிடப்பட வேண்டும். 2ஜி வழக்கில் விடுதலையானவர்கள், சி.ஏ.ஜி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முதலமைச்சராகத் துடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள், கள் இயக்கத்தின் சவாலை ஏற்று வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.