ஈஷா அவுட்ரீச் சார்பில் நரசிபுரம் பள்ளி வளாக கட்டிடம் கட்டும் பூமி பூஜை மற்றும் மரம் நடுவிழா

கோவை, டிசம்பர் 25

கோவை, நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஈஷா அவுட்ரீச் மற்றும் கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் இணைந்து புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை விழாவும், மேலும் 300 மரக்கன்றுகள் நடும் விழாவும் நஞ்சுண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் கோதலைவர் எஸ்.பி. அன்பரசன், ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி அபிபாதா, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் தலைவர் சப்தரிஷி, செயலாளர் ஆர். கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியர் கே. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.



அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் மெதுவாகக் கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஈஷா அவுட்ரீச்சினால் பணியமர்த்தப்பட்ட சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில் சிறப்பு பயிற்சி அளித்து அவர்கள் பள்ளி படிப்பை சுலபமாக கற்க உதவி வருகிறது. 10, 12-ஆம் வகுப்பில் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற இப்பயிற்சி அவர்களுக்கு உதவியாக அமையும். மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.



வாழ்வியல் கல்வி என்ற சிறப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நர்சரி உருவாக்கம், ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு, யோகா பயிற்சி போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி விளையாட்டில் ஈடுபடவைத்து வருடம் ஒரு முறை விளையாட்டு போட்டிகள் வைத்து விளையாட்டை ஊக்குவித்தல் போன்றவை இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது. 

மேலும் இலவச கலை மற்றும் கைவினை பொருட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஓவியம், எம்பிராய்டரி செய்தல், பொம்மை செய்தல், கூடை பின்னுதல் போன்றவை இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9787774178, 9840872441 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...