கோவை, டிசம்பர் 24
பரபரப்பாக நடந்து முடிந்த ஆர்.கே நகர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. சுமார் நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாநகரின் முக்கிய பகுதிகளிலும் தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக கோஷமிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆர்.கே நகர் தொகுதி வெற்றி குறித்து, அ.இ.அ.தி.மு.க(அம்மா அணி)யின் கோவை மாவட்ட கழக செயலாளர் N. சின்னதுரை கூறியதாவது, ‘புரட்சி தலைவி அம்மா வெற்றி பெற்ற தொகுதியில், அண்ணன் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு பெரும் உற்ச்சாகத்தை அளித்திருக்கிறது. இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். காரணம், இருபது நாட்களுக்கு மேல் ஆர்.கே. நகர் தொகுதியில் மக்களை நேராடியாக சந்தித்து பணியாற்றினோம். அப்பொழுது மக்களின் பேராதரவு அண்ணன் தினகரனின் பக்கம் மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்டோம். இன்று அது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலை முதலே மற்ற கட்சி நிர்வாகிகள் என்னை அழைத்து, தினகரனுக்கு ஆதரவாக தாங்களும் பணியாற்ற வருவதாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் எங்கள் அணியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பவுள்ளனர். நாங்கள் யாரையும் மறுக்காமல், அனைவரையும் சேர்த்து கொண்டு அ.தி.மு.க வை அசைக்க முடியாத கட்சியாக உருவாக்க முயற்சி செய்வோம்’ என்று கூறினார்.
மேலும், ‘தி.மு.க தான் எங்களின் போட்டியாளர்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர்களின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தமிழகத்தில் இனிமேல் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பேயில்லை’ என்றும் தெரிவித்தார்.
பரபரப்பாக நடந்து முடிந்த ஆர்.கே நகர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. சுமார் நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாநகரின் முக்கிய பகுதிகளிலும் தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக கோஷமிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆர்.கே நகர் தொகுதி வெற்றி குறித்து, அ.இ.அ.தி.மு.க(அம்மா அணி)யின் கோவை மாவட்ட கழக செயலாளர் N. சின்னதுரை கூறியதாவது, ‘புரட்சி தலைவி அம்மா வெற்றி பெற்ற தொகுதியில், அண்ணன் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு பெரும் உற்ச்சாகத்தை அளித்திருக்கிறது. இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். காரணம், இருபது நாட்களுக்கு மேல் ஆர்.கே. நகர் தொகுதியில் மக்களை நேராடியாக சந்தித்து பணியாற்றினோம். அப்பொழுது மக்களின் பேராதரவு அண்ணன் தினகரனின் பக்கம் மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்டோம். இன்று அது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலை முதலே மற்ற கட்சி நிர்வாகிகள் என்னை அழைத்து, தினகரனுக்கு ஆதரவாக தாங்களும் பணியாற்ற வருவதாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் எங்கள் அணியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பவுள்ளனர். நாங்கள் யாரையும் மறுக்காமல், அனைவரையும் சேர்த்து கொண்டு அ.தி.மு.க வை அசைக்க முடியாத கட்சியாக உருவாக்க முயற்சி செய்வோம்’ என்று கூறினார்.
மேலும், ‘தி.மு.க தான் எங்களின் போட்டியாளர்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர்களின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தமிழகத்தில் இனிமேல் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பேயில்லை’ என்றும் தெரிவித்தார்.