கோவை, டிசம்பர் 24
தமிழக எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் அழுகிய நிலையில் சிறுத்தைப்புலியின் உடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என வனத்துறை கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தமிழக- கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரது மகன் திலீப்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் கோழியை பிடிப்பதற்காக வந்த சிறுத்தைப்புலி கோழியைப் பிடித்து விட்டு ஓடிய போது திலீப்குமார் மீது மோதியதில் அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்து அவனது நெற்றியில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், வனத்துறையினர் கூண்டு வைக்கவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கேமரா வைத்து கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி கேமராவில் பிடிபடவில்லை.

இந்நிலையில் இன்று மளுக்கப்பாறை எஸ்டேட் டிவிசன் எடமலை ரேஞ்சுக்கு உட்பட்ட 10-வது லைன் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் துர்நாற்றம் வந்த பகுதியில் சென்று பார்த்த போது புதருக்குள் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எடமலை ரேஞ்ச் வனத்துறை அதிகாரி ஜெயகுமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி இறந்த சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்தார். இது உயிரிழந்து மூன்று நாட்கள் இருக்கும் எனவும், உடல்நலக்குறைவால் அச்சிறுத்தை இறந்துள்ளது எனவும் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி தெரிவித்தார்.
தமிழக எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் அழுகிய நிலையில் சிறுத்தைப்புலியின் உடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என வனத்துறை கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தமிழக- கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரது மகன் திலீப்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் கோழியை பிடிப்பதற்காக வந்த சிறுத்தைப்புலி கோழியைப் பிடித்து விட்டு ஓடிய போது திலீப்குமார் மீது மோதியதில் அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்து அவனது நெற்றியில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், வனத்துறையினர் கூண்டு வைக்கவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கேமரா வைத்து கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி கேமராவில் பிடிபடவில்லை.

இந்நிலையில் இன்று மளுக்கப்பாறை எஸ்டேட் டிவிசன் எடமலை ரேஞ்சுக்கு உட்பட்ட 10-வது லைன் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் துர்நாற்றம் வந்த பகுதியில் சென்று பார்த்த போது புதருக்குள் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எடமலை ரேஞ்ச் வனத்துறை அதிகாரி ஜெயகுமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி இறந்த சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்தார். இது உயிரிழந்து மூன்று நாட்கள் இருக்கும் எனவும், உடல்நலக்குறைவால் அச்சிறுத்தை இறந்துள்ளது எனவும் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி தெரிவித்தார்.