தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

டிசம்பர் 23

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூரில், பிற மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கும்பணிகள் ஜீன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா நகரில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சமுதாயக் கூடத்தில் 22.12.2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் யு.புளோரா தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் பேசும் போது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி கற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளுக்குத் தமிழக அரசின் மூலம் பாடப்புத்தகம், விளையாட்டு உபகரணங்கள், எழுதுபொருட்கள், மதிய உணவு, சீருடை, காலணி உள்ளிட்ட இலவச கற்றல் உபகரணங்கள் கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று, சமூக நலத்துறையின் சார்பில் முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்படுகிறது. வடமாநில குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஆதார் மையங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆதார் அட்டை பெற்றுத் தருவதோடு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி மாணவ, மாணவிகளின் வருகை 60 சதவீதம் இருக்கும்பட்சத்தில் மாதம் ரூ.400 ஊக்கத்தொகையாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கி சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் வழிகாட்டப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பெற்றோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் யு.புளோரா பரிசுகள் வழங்கினார். முடிவில் பாரதியார் பல்கலைக்கழக சமூக பணிஇயல் துறை முதலாம் ஆண்டு மாணவர் மதன்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...