டிசம்பர் 23
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
ஆற்றில் இருந்து இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
ஆற்றில் இருந்து இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.