கோவை, டிசம்பர் 23
வாக்காளர் அடையாள அட்டை வழங்கக் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் ஈ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்குக் கட்டணமாக பொதுமக்கள் ரூ.25 மட்டும் செலுத்தினால் போதுமானது. வாக்காளர் அடையாள அட்டைப் பெற உரிய கட்டணத்திற்கு மேல் செலுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
யாராவது அதிக பணம் பெறவது தெரியவந்தால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. யாராவது அதிக கட்டணம் செலுத்துமாறு கேட்டாலோ, அட்டைபெறுவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டாலோ, பொதுமக்கள் ஈ-சேவை மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர்கள், தேர்தல் தனிததுணை வட்டாட்சியர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கக் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் ஈ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்குக் கட்டணமாக பொதுமக்கள் ரூ.25 மட்டும் செலுத்தினால் போதுமானது. வாக்காளர் அடையாள அட்டைப் பெற உரிய கட்டணத்திற்கு மேல் செலுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
யாராவது அதிக பணம் பெறவது தெரியவந்தால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. யாராவது அதிக கட்டணம் செலுத்துமாறு கேட்டாலோ, அட்டைபெறுவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டாலோ, பொதுமக்கள் ஈ-சேவை மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர்கள், தேர்தல் தனிததுணை வட்டாட்சியர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.