கோவை, டிசம்பர் 23
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசு சிலைகளை 50 மில்லி கிராமில் உருவாக்கிய தங்க நகைத்தொழிலாளியின் படைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா நாளை மறுநாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி யுஎம்டி ராஜா என்பவர் உலகிலேயே மிகச்சிறியதும், தங்கத்தினால் ஆன நான்கு இயேசுவின் சிலைகளை 50 மில்லி கிராமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்க நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து கொண்டு பலவிதமான நிகழ்வுகளை, யுஎம்டி ராஜா தனது கலைத்திறமையால் படைத்து வருகிறார்.
மேலும், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பண்டிகை நாட்களைக் குறிப்பிடும் விதமான படைப்புகளை உருவாக்கும் அவர், பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். இதேபோல, சிறிய அளவிலான உலகக்கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவங்களைத் தங்கத்தில் அவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசு சிலைகளை 50 மில்லி கிராமில் உருவாக்கிய தங்க நகைத்தொழிலாளியின் படைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா நாளை மறுநாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி யுஎம்டி ராஜா என்பவர் உலகிலேயே மிகச்சிறியதும், தங்கத்தினால் ஆன நான்கு இயேசுவின் சிலைகளை 50 மில்லி கிராமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்க நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து கொண்டு பலவிதமான நிகழ்வுகளை, யுஎம்டி ராஜா தனது கலைத்திறமையால் படைத்து வருகிறார்.
மேலும், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பண்டிகை நாட்களைக் குறிப்பிடும் விதமான படைப்புகளை உருவாக்கும் அவர், பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். இதேபோல, சிறிய அளவிலான உலகக்கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவங்களைத் தங்கத்தில் அவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.