விஷவாயு தாக்கி பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவோம்: ஆய்வுக்குப்பின் துணை ஆட்சியர் பேட்டி

கோவை, டிசம்பர் 23

கோவையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவதாக பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையின் துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர். 

இவரது தங்கப்பட்டறையில் பத்தாரயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவு நீர் தொட்டி ஒன்று உள்ளது. தங்கத்தை சுத்தப்படுத்தும் கெமிக்கல்களை சேகரித்து வைக்க அந்த தொட்டி பயனடுத்தப்படும்.

நேற்று அதிகாலை 1 மணியளவில் தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தி தங்க துகள்களை பிரித்து எடுக்குமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஏழுமலை (23), ராதாகிருஷ்ணன் (28) மற்றும் வேடபட்டியை சேர்ந்த கவுரி சங்கர் (21) ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர். 

முன்னதாக கவுரிசங்கர் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்தினர். அப்போது தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



தொட்டிக்குள் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த ராதாகிருஷ்ணன் தொட்டிக்குள் பார்த்தபோது இருவரும் மயங்கி கிடப்பதை அறிந்தார். இது குறித்து அந்த நிறுவனத்தின் காவலரான சூர்யா (23) என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

தொடர்ந்து, சூர்யா-வும் தொட்டிக்குள் இறங்கினார். ஆனால், விஷ வாயு தாக்கியதில் அவரும் பலியானார். இது தொடர்பாக, தீயணைப்புத்துறைக்கும் ஆர்.எஸ்.புரம் போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பலியான 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவத்தில், பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், பணியின் போது உயிரிழந்த ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பணியாளருக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிட நலத்துறையின் துணை ஆட்சியர் செந்திவேல் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உயிரிழந்த 3 பேரில் ஒருவர் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று ஆய்வு நடத்தி வருகிறோம். பொதுவாக இது போன்ற கழிவுகளை அகற்ற மாநகராட்சி அல்லது டவுன் பஞ்சாயத்தின் ஊழியர்களை தான் ஈடுபடுத்த வேண்டும். ஆனால், விதிமீறி பணியாளர்களை கொண்டு சுத்தப்படுத்தியுள்ளனர். 

உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தை நிச்சயமாக நாங்கள் பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...