கோவை, டிசம்பர் 23
கோவையில் முதல் முறையாக 'கோவையில் திருவையாறு' என்ற மூன்று நாள் கலாச்சார திருவிழா இன்று மாநகராட்சி கலையரங்கில் தொடங்கியது.

இதில் கர்நாட்டிக் சங்கிதம், பரதநாட்டியம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூப்பது கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவர் கிருஷ்ணன், கோவையில் இது போன்ற கலாச்சார நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், மாறிவரும் நகரமயமாதல் காரணங்களினால் இதுபோன்ற கலைகள் மக்களிடையே மறந்து வருகிறது. இதனை மீட்டெடுக்க கோவையில் திருவையாறு போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். என்றார். 3 நாள் நடைபெறும் இவ்விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருவையாறை காணவரும் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
