முதலமைச்சரின் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாற்றம் செய்த விவகாரம் : ஒருவர் கைது

டிசம்பர் 23

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சட்டைப்பையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை மாற்றி, பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதைப் போல சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பாதிப்புகளை பார்வையிட சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அதிகாரிகள் வரவேற்றனர். இது தொடர்பான படங்கள் ‘வாட்ஸ்–அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.

பிரதமரை வரவேற்றபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சட்டைப்பையில் முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்திருந்தார். அந்தப் படத்தை வெளியில் இருந்து பார்த்தாலும் ஜெயலலிதா உருவம் தெரிந்தது.

இந்த நிலையில், அந்தப் படத்தில் ஜெயலலிதா உருவத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச்செய்து சமூக வலைத்தளங்களில் வி‌ஷமத்தனமாக வெளியிடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான கனகராஜ் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவரைக் கைது செய்தனர். அலெக்ஸ்பாண்டி, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...