கோவை, டிசம்பர் 23
சட்டப் பணிகளின் ஆணைக்குழு சார்பில் கோவையில் பேனல் வழக்கறிஞர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் ரேஸ்கோர்சில் உள்ள சட்டப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சட்டப் பாதுகாப்பு ஆணைக்குழு செயல் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான குலுவாடி ரமேஷ் தலைமை வகித்து, வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பேனல் வழக்கறிஞர்கள் சட்டப் பணிகளில் உள்ள நடைமுறை மாற்றங்கள் குறித்தும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உட்பட சட்ட ரீதியான விஷயங்களை மக்களிடம் எளிமையாக எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பயிற்சி முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சட்டப் பணிகளின் ஆணைக்குழு சார்பில் கோவையில் பேனல் வழக்கறிஞர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் ரேஸ்கோர்சில் உள்ள சட்டப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சட்டப் பாதுகாப்பு ஆணைக்குழு செயல் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான குலுவாடி ரமேஷ் தலைமை வகித்து, வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பேனல் வழக்கறிஞர்கள் சட்டப் பணிகளில் உள்ள நடைமுறை மாற்றங்கள் குறித்தும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உட்பட சட்ட ரீதியான விஷயங்களை மக்களிடம் எளிமையாக எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பயிற்சி முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.