நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய திருச்சி விமான நிலையத்தின் ”மாதிரி கட்டமைப்பு வரைபடம்” ரெடி

டிசம்பர் 22

நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.



இந்தியாவில் மிகவும் பழமையான விமான நிலையங்களில் ஒன்றான திருச்சி விமான நிலையம், தமிழகத்தில் சென்னை, கோவையைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிலையம் என்ற தரத்தைப் பெற்றுள்ளது. விமான போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை கையாள்வதில் கடும் இட நெருக்கடி காணப்படுகிறது. 



இதனைத்தொடர்ந்து, புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, திட்ட ஆலோசனை குழு திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்தது. அப்போது அந்தக் குழு, திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் ரூ.897 கோடியில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை இறுதி செய்து ஆலோசனை வழங்குவதற்காக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் தங்களது திட்ட அறிக்கையை இறுதி செய்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசிடம் வழங்குவார்கள். எனக் கூறியிருந்தது. 



இந்த நிலையில், பாஸ்கல் + வாட்சன் கட்டமைப்பு திட்டமிடும் நிறுவனம், நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. 



அதில், புதிய முனையமானது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பசுமை வளாகமாக அமையும். குறைந்த அளவு மின்சக்தியில் எரியும் எல்.இ.டி. விளக்குகள் மட்டுமே அமைக்கப்படும். கழிவு நீர் வீணாக்கப்படாமல் மறுசுழற்சி அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படும். மின்சார தேவைக்காக புதிய முனைய வளாகத்தில் சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் 1 அல்லது 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது. 

மேலும், 2020 ஆம் ஆண்டுக்குள் கட்டமைப்பு பணிகள் நிறைவடையும் என்றும், உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, திருவனந்தபுரம், சவுத்ரி சரன் சிங் சர்வதேச விமானநிலையங்களில் அமைக்கப்பட இருக்கும் புதிய முனையங்களின் மாதிரி கட்டமைப்பு வரைபடமும் வழங்கப்பட்டது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...