ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் இருதய நிபுணர் தினேஷ் ஆஜர்

டிசம்பர் 22

ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்தது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இதய செயலிழப்பு ஏற்பட்டது. அப்போது, மருத்துவர் தினேஷ் சிகிச்சை அளித்தார். அதன் அடிப்படையில் அவர் இன்று ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? நீங்கள் சிகிச்சை அளித்தபோது அவருக்கு உயிர் இருந்ததா? உடல்நிலை தேறி வந்தவர் திடீரென பின்னடைவு ஏற்படக்காரணம் என்ன? என்பது பற்றி மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...