ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து செய்தியாளரை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்

சென்னை, டிசம்பர் 21

ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 5 மணிக்கு மேல் ஜெயலலிதா வீடியோ குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 8 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

இதனிடையே, ஆர்.கே நகர் தொகுதியில் வாக்குப்பதிவைப் பார்வையிட்ட டி.டி.வி. தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்குச்சாவடிகளில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் தேர்தல் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மின்சாதனங்களில் கோளாறு ஏற்படுவது வழக்கம் தான் என்றார்.

மேலும், தேர்தலை ரத்து செய்ய பலரும் திட்டமிட்டு செயல்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சவாலாக தேர்தலை நடத்தி வருகிறது. எங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, வாக்குப்பதிவு முடிந்ததும் மறக்காமல் ஐந்து மணியளவில் பிரின்ஸ் லாட்ஜுக்கு வந்துவிடுங்கள். அந்த வீடியோ குறித்து முழுமையான விவரங்களை சொல்கிறேன் என்றார் தினகரன்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...