புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, டிசம்பர் 20

பல்நோக்கு பண்ணைக்குட்டை வளர்ப்புத்திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மாநில அளவில் மீன்வளர்ப்புப் பரப்பினை அதிகப்படுத்தவும், மாவட்ட அளவில் மீன் உற்பத்தியை பெருக்கிடவும், உள்ளூர் பொதுமக்களின் மீன் உணவுத் தேவையை நிறைவேற்றிடும் வகையில், பல்நோக்கு பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு, பரப்பில் 200 எண்ணம் 2500 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கவும் மற்றும் ஒருமுறை உள்ளீட்டுச் செலவினத்திற்கும் அலகு ஒன்றுக்கு ரூ. 1,28,500-ல் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் சொந்த நிலமும், குத்தகை நிலமெனில் 10 வருடக் குத்தகை ஒப்பந்தமும் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பப்படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 27.12.2017 ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மீன்வள உதவி இயக்குநர்,

எண்: 4 எஸ்.வி. காம்ப்லெக்ஸ் 2-ம் தளம், 

வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு,

திண்டல் அஞ்சல், ஈரோடு 638 012.

தொலைபேசி எண்: 0424 2271912.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...