கோவை, டிசம்பர் 20
கோவை, காளம்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி மோசடியில் ஈடுபட்டவரைப் பிடித்த பொதுமக்கள் கடுமையாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிறுவாணி சாலை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியில் ஜெகன் என்பவர் சிவன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து தொழில் நடத்தி வந்தார். இவர், பல இடங்களில் வீட்டுமனை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இவர் மக்களுக்கு போலி காசோலை கொடுத்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இணைந்து செவ்வாயன்று (டிச.19) ஜெகனின் அலுவலகத்திற்குள் புகுந்து அவரைச் சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சிலர் காயமடைந்த ஜெகனை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை வரவழைத்த நிலையில், பொதுமக்கள் அவரை அலுவலகத்தில் இருந்து வெளியேறவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தங்களிடம் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர உறுதியளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில், ஜெகன் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவை, காளம்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி மோசடியில் ஈடுபட்டவரைப் பிடித்த பொதுமக்கள் கடுமையாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிறுவாணி சாலை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியில் ஜெகன் என்பவர் சிவன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து தொழில் நடத்தி வந்தார். இவர், பல இடங்களில் வீட்டுமனை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இவர் மக்களுக்கு போலி காசோலை கொடுத்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இணைந்து செவ்வாயன்று (டிச.19) ஜெகனின் அலுவலகத்திற்குள் புகுந்து அவரைச் சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சிலர் காயமடைந்த ஜெகனை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை வரவழைத்த நிலையில், பொதுமக்கள் அவரை அலுவலகத்தில் இருந்து வெளியேறவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தங்களிடம் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர உறுதியளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில், ஜெகன் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
