தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் மாணவர்கள்


கோவை, டிசம்பர் 19

கோவை  வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தாததால் மதியம் வரை போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில் வங்கி கடன் வாங்கி படிக்க வந்துள்ளோம் இந்நிலையில் முதல் முறை மறு தேர்வு எழுத 1000 ருபாய் இரண்டாம்.முறைக்கு 2000 ஆயிரம் அதையே மூன்றாம் முறையாக எழுத வேண்டியது எனில் 3000 கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இது தங்களை பெரிதும் பாதிக்கும் என தெரிவித்தனர். 

தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வாங்கும் நிலையில் தற்போது அரசு கல்லூரி  நிர்வாகமும் கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறது எனவும் மாணவர்கள் கூறினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக முதன்மையர் மகிமைராஜா மற்றும் பதிவாளர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து பதிவாளர் சுதாகர் கூறுகையில் தேர்வு கட்டணம் 200 ருபாயாக இருபதால்  மாணவர்கள் தேர்வு எழுத வருவதில்லை மேலும் தேர்வில் தோல்வியடைந்தால் பெற்றோர்களிடம் கூறாமல் அஜாக்கிரதை போக்குடன் இருப்பதால் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...