ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - தமிழகத்திற்கு ரூ.4047 கோடி நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் கோரிக்கை

டிசம்பர் 19

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

ஒகி புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி, இன்று பகல் 2:20 மணியளவில் கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் குமரி வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். 

முன்னதாக, பிரதமர் மோடி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவுகளை ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு முடிந்த பின், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 4,047 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...