கோவை, டிசம்பர் 19
ஈஷா அவுட்ரீச் மற்றும் சோழ மண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிப்போட்டிகள் ஆதியோகி சிலை முன்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஈஷாஅவுட்ரீச், கிராம இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஈஷா சோழா கோப்பைக்கான வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளை கடந்த 9-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. சுமார் 700 கிராமங்களில் இருந்து 320 வாலிபால் மற்றும் 58 த்ரோபால் அணிகள் கலந்து கொண்டன. சுமார் 3,500 ஆண்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த அணிகளில் இடம்பெற்றனர்.
புதுச்சேரியிலும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, திருச்சி, விருத்தாசலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் கிராமப்புற அணிகளுக்கு நடைபெற்ற போட்டிகளின் காலிறுதி, அரைஇறுதிச் சுற்றுகள் வரும் 20, 21-ம் தேதிகளில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 21-ம்தேதி இறுதிசுற்று நடைபெறும். வெற்றிபெரும் அணிகளுக்கு ஈஷா சோழா கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
டிசம்பர் 21-ம்தேதி நடக்கும் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகி திருவுருவச்சிலை முன்னிலையில் காலை 8 மணி முதல் நடக்கிறது.
ஈஷா அவுட்ரீச் மற்றும் சோழ மண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிப்போட்டிகள் ஆதியோகி சிலை முன்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஈஷாஅவுட்ரீச், கிராம இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஈஷா சோழா கோப்பைக்கான வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளை கடந்த 9-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. சுமார் 700 கிராமங்களில் இருந்து 320 வாலிபால் மற்றும் 58 த்ரோபால் அணிகள் கலந்து கொண்டன. சுமார் 3,500 ஆண்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த அணிகளில் இடம்பெற்றனர்.
புதுச்சேரியிலும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, திருச்சி, விருத்தாசலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் கிராமப்புற அணிகளுக்கு நடைபெற்ற போட்டிகளின் காலிறுதி, அரைஇறுதிச் சுற்றுகள் வரும் 20, 21-ம் தேதிகளில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 21-ம்தேதி இறுதிசுற்று நடைபெறும். வெற்றிபெரும் அணிகளுக்கு ஈஷா சோழா கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
டிசம்பர் 21-ம்தேதி நடக்கும் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகி திருவுருவச்சிலை முன்னிலையில் காலை 8 மணி முதல் நடக்கிறது.