டிசம்பர் 18
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத் தேர்தல்களில் பாஜகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இரு மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள வெற்றி குறித்து டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலுக்குக் கிடைத்துள்ள வலுவான ஆதரவையே குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. இதற்காகக் கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்கள் அனைவரையும் வணங்குகிறேன். அவர்களின் கடினமான உழைப்புதான் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.
பாஜக மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்களைத் தலை வணங்குகிறேன். இந்த மாநிலங்களின் வளர்ச்சி பாதையில் உள்ள தடைக்கற்களை நாங்கள் அகற்றுவோம் என உறுதி அளிக்கிறேன். மக்களுக்காக அயராது உழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத் தேர்தல்களில் பாஜகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இரு மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள வெற்றி குறித்து டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலுக்குக் கிடைத்துள்ள வலுவான ஆதரவையே குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. இதற்காகக் கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்கள் அனைவரையும் வணங்குகிறேன். அவர்களின் கடினமான உழைப்புதான் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.
பாஜக மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்களைத் தலை வணங்குகிறேன். இந்த மாநிலங்களின் வளர்ச்சி பாதையில் உள்ள தடைக்கற்களை நாங்கள் அகற்றுவோம் என உறுதி அளிக்கிறேன். மக்களுக்காக அயராது உழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.